இடம் : தமிழ் நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருநாகேஸ்வரம் அருகே உள்ள, தேப்பெரூமாநல்லூர் கோயில்.
இறைவன் : காசி விஸ்வநாதர் அம்பாள் : வேதாந்த நாயகி
சிறப்பு நிகழ்வு:
இந்த கோவிலில் ஒரு அதிசயம் நடப்பதை கானலாம். தல மரம் வில்வ மரம். சூரிய கிரஹனத்தின் போது ஒரு ராஜ நாகம், இந்த கோவிலுக்குள் வந்து, வில்வ மரத்தில் ஏறி, ஒரு வில்வ இலையை பறித்துக்கொண்டு கிழே இறங்கி வந்து, கோ முகத்தின் வழியாக, கற்பககிரகத்திற்குள் நுழைந்து, சிவலிங்கம் மீது ஏறி, அந்த வில்வத்தை சுவாமிக்கு சமர்பிக்கின்றது. இந்த அதிசய செயலை 2, 3 முறை திரும்ப திரும்ப வில்வ இலையை விஸ்வநாதருக்கு சமர்பிப்பதை பக்தர்களும், கிராம மக்களும், பார்த்து வியந்து பரவசம் அடைந்தனர். எல்லா ஜீவ ராசிகளும் சிவனிடம் பக்தி கொள்வதை இதன் மூலம் அறியலாம் .
Reposted it from Smt. Raji Mali's Facebook update