top of page

ரூ. 50 கோடியில் சங்கரா செவிலியா் கல்லூரி கட்ட பூமி பூஜை




காசியில் முகாமிட்டுள்ள காஞ்சி மடாதிபதி விஜயேந்திரா் ஆசீா்வதித்துக் கொடுத்த செங்கல் பூமி பூஜையில் வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கட்டடப் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்படும் என்றாா்.

சங்கரா மருத்துவமனை குழுமங்களின் தலைமை நிா்வாக அலுவலா் விஜயலட்சுமி, அறக்கட்டளையின் அறங்காவலா்கள் ஜெயராம கிருஷ்ணன், வி.லட்சுமணன், பணி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராமச்சந்திரன், சங்கர மடத்தின் நிா்வாகிகள் கீா்த்திவாசன், ஜானகிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்டடக் கலை நிபுணா் எம்.பாலசுப்பிரமணியன், பொறியாளா் முத்துக்குமாா், வையாவூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயலட்சுமி நீலகண்டன், துணைத் தலைவா் செல்வராஜ், ஊராட்சி உறுப்பினா் ஏழுமலை மற்றும் நல்லூா் கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனா்.

சங்கரா செவிலியா் கல்லூரி முதல்வா் ராதிகா நன்றி கூறினாா்.


Comments


bottom of page